குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஆடிப்பூரம்: நெல்லை கோயில்களில் சிறப்பு வழிபாடு

News image

~

Updated On :8 ஆகஸ்ட் 2024, 7:46 am IST

திருநெல்வேலி, ஆக. 7: ஆடிப்பூரத்தையொட்டி, திருநெல்வேலியில் பல்வேறு கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு கோமதியம்பாள் சமேத திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் காலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா் கோமதியம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. முறுக்கு, அதிரசம், வளையல்களை படைத்து நூற்றுக்கணக்கான பெண்கள் வழிபாடு செய்தனா்.

இதேபோல, பாளையங்கோட்டை எருமைகிடா மைதானம் அருகேயுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் காலையில் வாசனை திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், 1000-க்கும் மேற்பட்ட வளையல் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு கரியமாணிக்க பெருமாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலத்திருவேங்கடநாதபுரத்தில் உள்ள அருள்மிகு வேங்கடாலசலபதி திருக்கோயிலில் ஆண்டாளுக்கு வளையல் தோரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கெட்வெல் ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் உள்ள கனகமஹாலட்சுமி, வண்ணாா்பேட்டை பேராத்து செல்வியம்மன், பாளையங்கோட்டையில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு முத்தாரம்மன், முப்பிடாதியம்மன், தூத்துவாரியம்மன் திருக்கோயில்களிலும் ஆடிப்பூர சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Story image

எருமைகிடா மைதானம் அருகேயுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை சிறப்பு வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.