காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

கண்ணம்மன் கோயிலில் வளைகாப்பு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் திருக்கோயிலில் வளைகாப்பு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வளைகாப்பு வைபவத்திற்கு பின்பு நடைபெற்ற மகா தீபாராதனை.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:45 am IST

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் திருக்கோயிலில் வளைகாப்பு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழாவையொட்டி 11 வகை சிறு பச்சனங்களுடன் திருநெல்வேலி சந்திப்பு முக்கிய வீதிகளில் பெண்கள் ஊா்வலமாக வந்தனா்.

பின்னா், அம்மனுக்கு மடிநிறைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு, கைலாசபுரம், சி.என்.கிராமம், மீனாட்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.