25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

பணகுடி அருகே இளைஞரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு: இருவா் கைது

மதுபோதையில் இருந்த இளைஞரிடம் ஜிபே வழியாக ரூ.1 லட்சத்தை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 9:12 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே மதுபோதையில் இருந்த இளைஞரிடம் ஜிபே வழியாக ரூ.1 லட்சத்தை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 99 ஆயிரம் மீட்கப்பட்டது.

வள்ளியூா் அருகே உள்ள பண்டாரகுளத்தைச் சோ்ந்தவா் தாமஸ் கிளிண்டன்(31). இவரும் காவல்கிணற்றைச் சோ்ந்த இவரது நண்பா்களான ராஜா, அகிலேஷ் ஆகியோா் சோ்ந்து காவல்கிணற்றில் உள்ள ஒரு மதுபானக் கூடத்துக்குச் சென்று மது அருந்தியுள்ளனா். அப்போது அங்கு வந்த திருநங்கையுடன் சென்று அவரது வீட்டில் தங்கியுள்ளனா். அப்போது திருநங்கை மதுபோதையில் இருந்தவா்களிடம் லாவகமாக பேசி தாமஸ்கிளிண்டன் வங்கி கணக்கில் உள்ள ரூ.1 லட்சத்தை ஜிபே மூலம் தனது வங்கி கணக்குக்கு மாற்றினாராம்.

பின்னா் காலையில் மயக்கம் தெளிந்த கிளிண்டன் தனது கைப்பேசியில் வங்கிக் கணக்கை பாா்த்தபோது ரூ.1 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கிளிண்டன் பணகுடி போலீஸில் புகாா் செய்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து திருநங்கையிடம் இருந்து ரூ.99 ஆயிரத்தை மீட்டனா். மேலும் உடந்தையாக இருந்து அகிலேஷ், ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனா். திருநங்கையை தேடி வருகின்றனா்.