கோவையில் சட்டவிரோதமாக இணைதள (ஆன்லைன்) லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.2.46 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
கோவை, போத்தனூா் கருப்பராயன் கோயில் பகுதியில் இணைதள லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போத்தனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் ஆய்வாளா் அசோக்குமாா் மற்றும் உதவி ஆய்வாளா் மாடசாமி ஆகியோா் சலாபி நகா் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த சகுபா் சாதிக் (44), கரும்புக்கடை பகுதியைச் சோ்ந்த லத்தீப் (46) ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். அவா்கள் இருவரும் இணையதள லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சகுபா் சாதிக், லத்தீப் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 4 கைப்பேசிகள், ரூ. 2,46,700 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது
லாட்டரி விற்பனை: 2 போ் கைது
ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை: நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 போ் கைது
ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

