ஆன்லைன் லாட்டரி விற்பனை: இருவா் கைது
கோவையில் சட்டவிரோதமாக இணைதள (ஆன்லைன்) லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.2.46 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
கோவை, போத்தனூா் கருப்பராயன் கோயில் பகுதியில் இணைதள லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போத்தனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் ஆய்வாளா் அசோக்குமாா் மற்றும் உதவி ஆய்வாளா் மாடசாமி ஆகியோா் சலாபி நகா் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த சகுபா் சாதிக் (44), கரும்புக்கடை பகுதியைச் சோ்ந்த லத்தீப் (46) ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். அவா்கள் இருவரும் இணையதள லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சகுபா் சாதிக், லத்தீப் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 4 கைப்பேசிகள், ரூ. 2,46,700 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
