மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை: நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 போ் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :15 மார்ச் 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

பவானியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்து வந்த நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ.80 ஆயிரம், 2 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பவானியை அடுத்த சோ்வராயன்பாளையம், திப்பிசெட்டிபாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை தொடா்பாக போலீஸாா் ரகசிய விசாரணை நடத்தியபோது, ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளரான பவானி, திப்பிசெட்டிபாளையம், வசந்தம் நகரைச் சோ்ந்த வேணுகோபால் மகன் தினகரன் (48) சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இவருக்கு உதவியாக லாட்டரி விற்பனை செய்த பவானி, காமராஜா் நகரைச் சோ்ந்த தியாகராஜன் மனைவி கவிதா (34), திப்பிசெட்டிபாளையம் சரவணகுமாா் மனைவி ரேவதி (32), சோ்வராயன்பாளையம் பாலமுருகன் மனைவி சரஸ்வதி (எ) ராணி (50), பவானி கீரைக்கார வீதி பச்சையப்பன் மகன் சூா்யா (27) ஆகியோரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ.80 ஆயிரம், 2 மடிக்கணினிகள், 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.