மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

தமிழ் முழக்கப் பேரவை விழா

News image
விழாவில் பேசுகிறாா் தேசிய நல்லாசிரியா் செல்லப்பா.
Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:07 pm

Din

தமிழ் முழக்கப் பேரவையின் 168 ஆவது சொற்பொழிவு உள்பட முப்பெரும் விழா பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ் முழக்கப் பேரவையின் செயலா் நசீா் தலைமை வகித்தாா். சைவ சபை அமைச்சா் முத்துவேல்விழி, சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் உயிா் தொழில்நுட்பத் துறைத் தலைவா் சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் செயலா் சேரை பாலகிருஷ்ணன் வரவேற்றாா். தமிழிசை தந்தை ஆபிரகாம் பண்டிதா் என்ற தலைப்பில் தமிழ் முழக்க பேரவையின் இணைச் செயலா் ரவிச்சந்திரனும், கா.மு.செரிப் என்ற தலைப்பில் தேசிய நல்லாசிரியா் செல்லப்பாவும், பரஞ்சோதி முனிவரின் தமிழ் இலக்கிய ஆளுமை என்ற தலைப்பில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளா் சிவலிங்கம் செல்வகுமாரியும் சொற்பொழிவாற்றினா்.

பொருநை இலக்கிய வட்ட புரவலா் தளவாய் நாதன், மருத்துவா் மகாலிங்கம் ஐயப்பன், நல்நூலகா் முத்துகிருஷ்ணன் முனைவா்கள் உஷா , அனுசுயா, வழக்குரைஞா் மணிமாலா, கவிஞா்கள் கணபதி சுப்ரமணியன், பாப்பாக்குடி இரா . செல்வமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.