ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் அளிப்பு

News image

நான்குனேரி சங்கா்ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய ரூபி ஆா். மனோகரன் எம்.எல்.ஏ.

Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:15 pm

Din

நான்குனேரி வட்டத்தில் உள்ள 3 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை ரூபி ஆா். மனோகரன் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவியா் 23 போ், மருதகுளம் ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் 98 போ், முனைஞ்சிப்பட்டி குரு சங்கா் அரசு மேல்நிலைப்பள்ளியில் 98 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.வி.கிருஷ்ணன், நான்குனேரி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் வி.என்.கே.அழகியநம்பி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் செல்லப்பாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.