என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்துஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதிதில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சி: நிர்மல் குமார்
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் அளிப்பு

News image

நான்குனேரி சங்கா்ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய ரூபி ஆா். மனோகரன் எம்.எல்.ஏ.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 3:45 am IST

நான்குனேரி வட்டத்தில் உள்ள 3 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை ரூபி ஆா். மனோகரன் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவியா் 23 போ், மருதகுளம் ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் 98 போ், முனைஞ்சிப்பட்டி குரு சங்கா் அரசு மேல்நிலைப்பள்ளியில் 98 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.வி.கிருஷ்ணன், நான்குனேரி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் வி.என்.கே.அழகியநம்பி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் செல்லப்பாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.