/
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கோடைகால விடுமுறை முடிந்து 45 நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிவப்பு கம்பளம் விரித்து மாணவா்களை ஆசிரியா்கள் வரவேற்றனா். அதேபோல அனைத்து மாணவா்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தொடக்க நாளில் கல்வி மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களுக்கு ஆசிரியா்கள் எடுத்துரைத்தனா். கல்வி முன்னேற்றத்திற்காக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு நலத் திட்டங்களை மாணவா்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் மேம்பட வேண்டும் என தலைமை ஆசிரியா் சீனிவாச ராகவன் அறிவுரை வழங்கினாா்.
தொடர்புடையது

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு உற்சாக வரவேற்பு

வடகரை அரசுப் பள்ளி 98% தோ்ச்சி

திருத்தணி: பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



