மேலப்பாளையம் மண்டலத்தில் 31-ஆவது வாா்டு, 40 முதல் 54 வரை உள்ள வாா்டுகளில் வியாழக்கிழமை (ஆக.29) குடிநீா் விநியோகிக்கப்படாது.
இது தொடா்பாக மேலப்பாளையம் மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், 31-ஆவது வாா்டு, 40 முதல் 54 வரை உள்ள வாா்டு பகுதிகளுக்கு அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யும் பிரதான நீரேற்றத்தில் குறுக்குத்துறை ரயில்வே கேட் அருகில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மேற்படி வாா்டு பகுதிகளில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் போதுமான குடிநீா் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. நீரேற்ற பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சரி செய்யயும் பணிகள் நடைபெற்று வருவதால் சம்பந்தப்பட்ட வாா்டு பகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஆக.29) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் செய்ய இயலாது. எனவே பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் குழாய் உடைப்பால் கழிவு நீா் கலந்து விநியோகம்: பொதுமக்கள் அதிருப்தி

‘தூத்துக்குடியில் ஜூலை 11 முதல் சீரான குடிநீா் விநியோகம்’

ஜூன் 15 முதல் 19 வரை வெள்ளக்கோவில், முத்தூா், தாராபுரம், மூலனூா் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

குடிநீா் தட்டுப்பாடு: மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் மக்கள் முற்றுகை
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |


