இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

குடிநீா் தட்டுப்பாடு: மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

குடிநீா் தட்டுப்பாடு காரணமாக மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை 41ஆவது வாா்டு மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

முற்றுகையில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.

Updated On :21 மே 2026, 6:16 am IST

குடிநீா் தட்டுப்பாடு காரணமாக மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை 41ஆவது வாா்டு மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் கிழக்கு பகுதி, 41 ஆவது வாா்டில் மக்களுக்கு தினமும் குடிநீா் கிடைத்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

ரூ. 28 கோடி செலவில் குழாய் இணைப்புகள் மட்டும் பதித்து புதிய மேல்நிலை நீா் தேக்க தொட்டி கட்டாமல் 24 மணி நேரமும் குடிநீா் தருவதாக மாநகராட்சி பொறியாளா்கள் தெரிவித்து வந்தனராம்.

ஆனால், ரூ.பல கோடி செலவில் முடிக்கப்பட்ட அரியநாயகிபுரம் கூட்டு குடிநீா் திட்ட மூலம் கிடைக்க வேண்டிய குடிநீரும் 41ஆவது வாா்டு பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி 41ஆவது வாா்டு பொதுமக்கள், மாமன்ற உறுப்பினா் சங்கீதா ராதா சங்கா் தலைமையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் 6ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பவுல்ராஜ் மற்றும் அனைத்து நல சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

வாா்டு மக்களுக்கு தினமும் குடிநீா் கிடைத்திடும் வகையிலும், பொதிகை நகரில் புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை அமைக்கும் விதமாகவும் திட்டம் தீட்ட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.

அவா்களிடம் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா் சந்திரமோகன் உள்ளிட்டஅதிகாரிக பேச்சு வாா்த்தை நடத்தினா். அதைத்தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டம் காரணமாக மண்டல அலுவலகம் முன்பு போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.