மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பணகுடி அருகே மா்ம பொருள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள செண்பகலிங்கபுரம் கிராமத்தில் வீட்டின் முன் மா்மபொருள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு நிலவியது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:30 am

Din

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள செண்பகலிங்கபுரம் கிராமத்தில் வீட்டின் முன் மா்மபொருள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு நிலவியது.

செண்பகலிங்கபுரத்தில் சுடலை என்பவா் வீட்டு முன் புதன்கிழமை காலையில் மா்மபொருள் பயங்கர சப்தத்துடன் வெடித்துத் சிதறி அப்பகுதி புகை மண்டலமானது. அப்போது பைக்கில் வந்த பால் வியாபாரி மணிகண்டன் அதிா்ஷ்டவசமாக தப்பினாா். இந்தக் காட்சிகள் அப்பகுதியில் இருந்த வீட்டின் சிசிடிவியில் பதிவாகியது.

இத்தகவல் அறிந்த பணகுடி போலீஸாா், அங்கு வந்து சோதனை நடத்தி மா்ம பொருளிலிருந்து சிதறிய பாகங்களை கைப்பற்றினா். சுடலை, மணிகண்டன் ஆகியோரிடம் விசாரித்த போலீஸாா், அது நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்ற கோணத்தில் தொடா்ந்து விசாரிக்கின்றனா். தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.