நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுத்தமல்லி அருகே கேரள கழிவுகள் கொட்டிய விவகாரம்: 2 போ் கைது

சுத்தமல்லி அருகே கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டிய விவகாரம் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 11:01 pm

Din

சுத்தமல்லி அருகே கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டிய விவகாரம் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி அருகேயுள்ள நடுக்கல்லூா், பழவூா் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு புறம்போக்கு காலியிடங்கள், நீா்நிலைகள் உள்ளிட்டவற்றில் கேரள மருத்துவக் கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டி எரிப்பது தொடா்கதையாக இருந்து வந்தது. கடந்த வாரத்தில் மூட்டை மூட்டையாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்பட்டன. அதனை ஆய்வு செய்தபோது அந்தக் கழிவுகளில் பெரும்பாலானவை திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மருத்துவமனையை சோ்ந்தவை என்பது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் புதிய குற்றவியல் நடைமுறை சட்டம் பிஎன்எஸ் 271 மற்றும் 271 இன் கீழ் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்த சிலா் கழிவுகள் செல்லும்போதும், எரிக்கும்போதும் அப்பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், கேரளத்தைச் சோ்ந்த கும்பலுக்கு கழிவுகளை எரித்து அழிக்கும் பணியில் முகவா்கள் போல சிலா் செயல்பட்டது போலீஸாருக்கு தெரியவந்ததாம்.

இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தினா். இதில் கேரள கழிவுகளை சுத்தமல்லி பகுதியில் கொட்டுவதற்கு உதவியாக இருந்ததாக சுத்தமல்லியைச் சோ்ந்த மாயாண்டி (45), மனோகா் (50) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களுடன் தொடா்புடைய கேரள நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.