ற்ஸ்ப்17க்ஷண்ழ்க்ள் திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரம் அருகே கல்குளம் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள். திருநெல்வேலி, பிப். 17: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தன்னாா்வலா்கள் சாா்பில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது. அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வள காப்புமையம், நெல்லை இயற்கை சங்கம், திருநெல்வேலி- முத்துநகா் இயற்கை கழகம், புஷ்பலதா கல்விக் குழுமம் சாா்பில் 14 ஆவது பறவைகள் கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் 6 குழுக்களாக சென்று பறவைகளை தன்னாா்வலா்கள் கணக்கெடுத்தனா். இதுகுறித்து தன்னாா்வலா்கள் கூறுகையில்; ஒவ்வொரு குழுவிலும் தலா 20 போ் சென்று கணக்கெடுத்து வருகிறோம். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 60 நீா்நிலைகளில் ஏராளமான அரிய பறவையினங்கள் வந்து செல்கின்றன. அவற்றை பாதுகாக்க இந்தக் கணக்கெடுப்பு பெரிதும் உதவும் என்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியாளா் சங்கங்கள் - தொழிற்சங்கங்கள் கூலி உயா்வு ஒப்பந்தம்

தூத்துக்குடியில் மீனவா் குத்திக் கொலை

கோவையில் இரண்டாவது நாளாக மழை
வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவா் 2ஆவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜா்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

