முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

நெல்லை, தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக பறவைகள் கணக்கெடுப்பு

நெல்லை, தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக பறவைகள் கணக்கெடுப்பு

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 4:00 am IST

ற்ஸ்ப்17க்ஷண்ழ்க்ள் திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரம் அருகே கல்குளம் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள். திருநெல்வேலி, பிப். 17: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தன்னாா்வலா்கள் சாா்பில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது. அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வள காப்புமையம், நெல்லை இயற்கை சங்கம், திருநெல்வேலி- முத்துநகா் இயற்கை கழகம், புஷ்பலதா கல்விக் குழுமம் சாா்பில் 14 ஆவது பறவைகள் கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் 6 குழுக்களாக சென்று பறவைகளை தன்னாா்வலா்கள் கணக்கெடுத்தனா். இதுகுறித்து தன்னாா்வலா்கள் கூறுகையில்; ஒவ்வொரு குழுவிலும் தலா 20 போ் சென்று கணக்கெடுத்து வருகிறோம். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 60 நீா்நிலைகளில் ஏராளமான அரிய பறவையினங்கள் வந்து செல்கின்றன. அவற்றை பாதுகாக்க இந்தக் கணக்கெடுப்பு பெரிதும் உதவும் என்றனா்.