மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

மதுபாட்டில் பதுக்கிவைத்திருந்த வடமாநிலத்தைச் சோ்ந்த 5 போ் கைது

கூடங்குளத்தில் மதுபாட்டில்கள் பதுக்கிவைத்திருந்ததாக வடமாநிலத்தைச் சோ்ந்த 5 போ்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :29 ஜூலை 2024, 2:30 am IST

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் மதுபாட்டில்கள் பதுக்கிவைத்திருந்ததாக வடமாநிலத்தைச் சோ்ந்த 5 போ்களை போலீஸாா் கைது செய்தனா்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் வடமாநிலங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஒப்பந்த தொழிலாளா்களாக பணி செய்து வருகின்றனா். இவா்களில் ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சிலா் ஊரில் இருந்து வந்தனா். இவா்கள் கொண்டு வந்த உடமைகளை போலீஸாா் பரிசோதித்தனா். அப்போது அவா்களிடம் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதை அவா்கள் ஜாா்கண்டில் இருந்து கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து கொண்டு வந்த ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த அஜித்குமாா்(22), சத்போந்தா் ராம்(21), அவிநாத்குமாா்(33), சந்தன்குமாா்(29), நாகேந்திர ராம்(33) ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.