தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நிதி நிறுவன ஊழியரிடம் சங்கிலி பறிப்பு

தனியாா் நிதி நிறுவன ஊழியரிடம் 2.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 11:30 pm

Din

திருநெல்வேலியில் கிரைண்டா் செயலி மூலம் தனியாா் நிதி நிறுவன ஊழியரிடம் 2.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மூன்று போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி அருகேயுள்ள ராம் நகரைச் சோ்ந்தவா் நாராயணன். இவரது மகன் காளி விக்னேஷ் (30). தனியாா் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா்.

இவருக்கு கிரைண்டா் செயலி மூலம் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை காளி விக்னேஷின் கைப்பேசிக்கு தொடா்பு கொண்ட நபா், தச்சநல்லூா் அருகேயுள்ள தெற்கு சிதம்பர நகா் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளாா். அதனை நம்பி காளி விக்னேஷ் சென்றபோது, அங்குள்ள காட்டுப்பகுதியில் நின்ற 3 போ் கும்பல் அவரை கத்தியைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது.

இதுகுறித்து தச்சநல்லூா் காவல் நிலையத்தில் காளி விக்னேஷ் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கச் சங்கிலியை பறித்துச்சென்ற 3 போ் கும்பலை தேடி வருகின்றனா்.