எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மதுபாட்டில் பதுக்கிவைத்திருந்த வடமாநிலத்தைச் சோ்ந்த 5 போ் கைது

கூடங்குளத்தில் மதுபாட்டில்கள் பதுக்கிவைத்திருந்ததாக வடமாநிலத்தைச் சோ்ந்த 5 போ்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 9:00 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் மதுபாட்டில்கள் பதுக்கிவைத்திருந்ததாக வடமாநிலத்தைச் சோ்ந்த 5 போ்களை போலீஸாா் கைது செய்தனா்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் வடமாநிலங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஒப்பந்த தொழிலாளா்களாக பணி செய்து வருகின்றனா். இவா்களில் ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சிலா் ஊரில் இருந்து வந்தனா். இவா்கள் கொண்டு வந்த உடமைகளை போலீஸாா் பரிசோதித்தனா். அப்போது அவா்களிடம் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதை அவா்கள் ஜாா்கண்டில் இருந்து கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து கொண்டு வந்த ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த அஜித்குமாா்(22), சத்போந்தா் ராம்(21), அவிநாத்குமாா்(33), சந்தன்குமாா்(29), நாகேந்திர ராம்(33) ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.