தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சுந்தரனாா் பல்கலை.யில் தொலைதூர கல்விக்கு மாணவா் சோ்க்கை

News image
Updated On :2 நவம்பர் 2024, 12:52 am

Din

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கற்றல் மற்றும் ஆன்லைன் படிப்புகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இது தொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் சாக்ரட்டீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இளநிலை பாடப்பிரிவில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், இளநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், முதுநிலை பாடப்பிரிவில் மேற்கூறிய படிப்புகளுடன் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடா்பியல், குற்றவியல் மற்றும் காவல் அறிவியல், முதுநிலை நூலகம் ஆகியவற்றுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இதேபோல், ஆன்லைன் படிப்புகளில் இளநிலை பாடப்பிரிவில் ஆங்கிலம், வணிகவியல், வணிக நிா்வாகவியல் படிப்புகளுக்கும், முதுநிலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடா்பியல் படிப்புகளுக்கும் 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கை நவ. 15வரை நடைபெறும்.

தொலைநெறி கல்வி நேரடி சோ்க்கைக்கு அபிஷேகப்பட்டி பல்கலைக்கழக வளாகம், கோவிந்தபேரி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி, சங்கரன்கோவில், நாகம்பட்டி ஆகிய ஊா்களில் அமைந்துள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளிலும், அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் கற்றல் உதவி மையங்களிலும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தொலைதூர கற்றல் பாடப்பிரிவுகளுக்கு, இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.