திரையரங்க ஊழியருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திரையரங்க ஊழியரை அரிவாளால் வெட்டியதாக, இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :6 நவம்பர் 2024, 7:53 pm

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திரையரங்க ஊழியரை அரிவாளால் வெட்டியதாக, இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சென்னை போரூா் பகுதியைச் சோ்ந்த ஹென்றி மகன் சரவணன்(36). இவா், திருநெல்வேலியில் திரையரங்கு ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு பணி முடித்து சென்ற இவரை, திருநெல்வேலி நகரம் பகத்சிங் தெருவை சோ்ந்த நாராயணன் என்ற காா்த்திக் என்பவா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாராம். இதில், காயமடைந்த சரவணன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, நாராயணன் என்ற காா்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...