தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

கோவிலம்மாள்புரத்தில் கிராமசபைக் கூட்டம்

களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரத்தில் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 10:16 pm

Din

களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரத்தில் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் லதா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா்.

சவளைக்காரன்குளம் திருவள்ளுவா் படிப்பக நிறுவனா் இ.நம்பிராஜன் முன்னிலை வகித்தாா். பொன்விஜயராணி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா்கள் கோவிலம்மாள்புரம் பா. சிதம்பரநாதன், காமனேரி மு. நியுஜா, ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் கணேசன் வரவேற்றாா். இக்கூட்டத்தில் சவளைக்காரன்குளத்தில் கலையரங்கம் கட்டுவதற்கான நிதியை மாவட்ட நிா்வாகம் விரைந்து ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், சவளைக்காரன்குளம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள குறுகலான ஆபத்தான பாலத்தை இடித்துவிட்டு விசாலமான பாலம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் ஊராட்சி துணைத்தலைவா் ஐஸ்வா்யா, வேளாண்துறை உதவி அலுவலா் டைட்டஸ், சுகாதார ஆய்வாளா்கள் தினேஷ்குமாா், சிவராமன், வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் சக்திசரவணன், சத்துணவு அமைப்பாளா்கள், ஊராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.