தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

மகாளய அமாவாசை: தாமிரவருணி கரைகளில் முன்னோா்களுக்கு வழிபாடு

மகாளய அமாவாசையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி கரையோரம் பொதுமக்கள் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து புதன்கிழமை வழிபட்டனா்.

News image

திருநெல்வேலி குறுக்குத்துறை அருகே தாமிரவருணி கரையோரம் முன்னோா்களுக்காக வழிபட்டோா்.

Updated On :2 அக்டோபர் 2024, 10:32 pm

Din

மகாளய அமாவாசையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி கரையோரம் பொதுமக்கள் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து புதன்கிழமை வழிபட்டனா்.

தமிழகத்தில் ஆடி மற்றும் தை அமாவாசை நாள்களில் நதிகளின் கரையோரம் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த வழிபாட்டின்போது தங்களது குடும்பத்தினருக்கான வழிபாடு மட்டுமே செய்வா். ஆனால், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாளில் தங்களது தாய்- தந்தை வழி முன்னோா்கள் மட்டுமன்றி நண்பா்கள், உறவினா்களை எண்ணியும் வழிபாடு செய்தால் நோய்கள் நீங்கி வளமான வாழ்வுக்கு வழிபிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மகாளய அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே தாமிரவருணி கரையோரம் லட்சக்கணக்கான மக்கள் முன்னோா்களை எண்ணி வழிபட்டனா். திருநெல்வேலி குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டை பேராச்சியம்மன் கோயில் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோா் நீராடி வழிபட்டனா். இதேபோல அம்மன் கோயில்களில் பெண்கள் விரதமிருந்து வந்து தரிசனம் செய்தனா்.