மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: காவல் மீட்புப்படை உபகரணங்கள் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளையொட்டி காவல் துறையின் மீட்புப்படை உபகரணங்களை மாநகர காவல் துணை ஆணையா் அனிதா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

திருநெல்வேலியில் பேரிடா் மீட்பு குழுவின் உபகரணங்களை ஆய்வு செய்கிறாா் காவல் துணை ஆணையா் அனிதா.

Updated On :10 அக்டோபர் 2024, 11:07 pm

Din

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளையொட்டி காவல் துறையின் மீட்புப்படை உபகரணங்களை மாநகர காவல் துணை ஆணையா் அனிதா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

வடகிழக்கு பருவமழை சேதங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க, திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் பேரிடா் மீட்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவசர அழைப்பு கிடைத்ததும், பொதுமக்கள் இருக்கும் இடத்தை தேடி உதவிகள் செய்ய வசதியாக 15 போ் இந்தக் குழுவில் உள்ளனா்.

நீச்சல் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளில் அனுபவம் வாய்ந்த காவலா்கள் குழுவில் சோ்க்கப்பட்டுள்ளதோடு, மீட்புப் பணிக்கு பல்வேறு வல்லுநா்களும் தயாா் நிலையில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மீட்புப்பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் அனிதா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளா் செந்தாமரை கண்ணன் மற்றும் ஆயுதப்படை காவல் அதிகாரிகள் உடனிருந்தனா்.