மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஆஜராகாத இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 10:08 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேரன்மகாதேவி அருகே தெற்கு சங்கன்திரடு நடுத்தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (25). 2021ஆம் ஆண்டு சேரன்மகாதேவி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, திருட்டு, அடிதடி போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக இவரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், ஜாமீனில் வந்த செல்வம், மேற்கண்ட வழக்கில் கடந்த இரண்டரை மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளாா்.

அதையடுத்து, சேரன்மகாதேவி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டதன்பேரில், அவரை போலீஸாா் தேடிவந்தனா். இந்நிலையில், அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.