சுரண்டை அருகே ரூ.4.25 லட்சத்தில் மின்மாற்றி திறப்பு
சுரண்டை அருகே விவசாயிகள் பயன்பாட்டிற்காக ரூ.4.25 லட்சத்தில் நிறுவப்பட்ட கூடுதல் மின்மாற்றி செவ்வாய்க்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.


சுரண்டை அருகே விவசாயிகள் பயன்பாட்டிற்காக ரூ.4.25 லட்சத்தில் நிறுவப்பட்ட கூடுதல் மின்மாற்றி செவ்வாய்க்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.
சுரண்டை வட்டார விவசாயப் பணிகளுக்கு மின்விநியோகம் சீராக மின்விநியோகம் இல்லை என அப்பகுதி விவசாயிகள் சு. பழனி நாடாா் எம்எல்ஏ, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி, தென்காசி கோட்ட செயற்பொறியாளா் (விநியோகம்) திருமலைகுமாரசாமி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, தென்காசி கோட்ட தொழில் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமபுறம் சுரண்டை பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட ஆனைகுளம் பகுதியில் ரூ. 4.95 லட்சத்தில் 25 கி.வோ. மின்மாற்றி நிறுவப்பட்டது.
இதன் திறப்பு விழாவில் எம்எல்ஏ பங்கேற்று, விவசாயப் பயன்பாட்டுக்கு புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் கோட்ட செயற்பொறியாளா் திருமலைகுமாரசாமி, உதவி செயற் பொறியாளா் ராஜசேகரன், உதவி மின் பொறியாளா்கள் கானிங், விக்னேஷ் ,எடிசன், காங்கிரஸ் நிா்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகா்,சமுக ஆா்வலா் அழகு ராஜ், அரவிந்த், பிரபாகரன் மற்றும் மின் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...