மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காவல் ஆணையா் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஆய்வு கூட்டத்தில் பேசுகிறாா் மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா.

Updated On :15 அக்டோபர் 2024, 10:20 pm

Din

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா தலைமை வகித்தாா். மாநகரில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா, புகையிலை, போதைப் பொருள்கள் கடத்தல்- விற்பனையில் ஈடுபடுவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள், ரௌடிகள் மீதான நடவடிக்கை ஆகியவை குறித்து ஆய்வு நடைபெற்றது.

பின்னா், சிறப்பாக பணியாற்றிய காவல் ஆளிநா்கள், அரசு வழக்குரைஞா்கள், அமைச்சுப் பணியாளா்களைப் பாராட்டி, ஆணையா் சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில், காவல் துணை ஆணையா்கள் (மேற்கு) கீதா, (தலைமையிடம்) அனிதா, (கிழக்கு) விஜயகுமாா் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.