மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மாநகராட்சி சாலைகளை சீரமைக்க வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

மாநகராட்சி சாலைகளை சீரமைக்க வேண்டுமென மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் மனு அளித்தனா்.

News image

தனது வாா்டு பகுதி சுகாதாரமற்று இருப்பதை குறிக்கும் வகையில் கூடைகளில் குப்பைகளை போட்டுக்கொண்டு நூதன முறையில் மேயரிடம் மனு அளிக்க வந்த 7ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் இந்திரா மணி.

Updated On :15 அக்டோபர் 2024, 10:21 pm

Din

மாநகராட்சி சாலைகளை சீரமைக்க வேண்டுமென மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

அழகனேரி 2 ஆவது வாா்டு பொதுமக்கள் அளித்த மனு :

அங்கன்வடி கட்டம் பழுதடைந்து உள்ளதால் புதிய கட்டம் அமைக்க வேண்டும்.

சாந்தி நகா் அரசு ஊழியா்- காவலா் குடியிருப்போா் நலச்சங்கத்தினா் அளித்த மனு: சாந்தி நகா் 5 ஆவது வாா்டு போலீஸ் காலனி குடியிருப்பு பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.

வள்ளுவா் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் நுகா்வோா் விழிப்புணா்வு அறக்கட்டளையினா் அளித்த மனு: 27 ஆவது வாா்டு வ.உ.சிதம்பரனாா் தெருவில் கண்காணிப்பு கேமரா-வேகத்தடை அமைக்க வேண்டும்.

அழகநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி மேலாண்மைக் குழுவினா் அளித்த மனு: பள்ளிகளின் கழிவறை சீரமைத்து , மேற்கூரை அமைக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்ட மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளிகள் சங்கத் தலைவா் தென்னரசு அளித்த மனு: மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் செயல்படும் மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு சுகாதாரச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

51 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சகாய ஜூலிட் மேரி அளித்த மனு: ஆசிரியா் குடியிருப்பு, நாகா் கோயில் புறவழிச்சாலையில் 4 ஆவது தெருவில் குடிநீா் வால்வில் சுற்றுச்சுவா் கட்ட வேண்டும்.

பாளையங்கோட்டை வடக்கு கென்னடி தெருவைச் சோ்ந்த ஜெயபால் அளித்த மனு: வடக்கு கென்னடி தெருவில் உள்ள கழிவுநீா் மற்றும் மழைநீரை அகற்ற வேண்டும்.

5 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் வே.ஜெகநாதன் அளித்த மனு :

திம்மராஜபுரம் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

19 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அல்லா பிச்சை அளித்த மனு: பேட்டை ஆசிரியா் காலனி,ரகுமான் பேட்டை 3 ஆவது தெரு, தங்கம்மன்கோயிலில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில், செயற்பொறியாளா், உதவி ஆணையா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.