புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருக்குறுங்குடியில் வனத் துறையினா்-விவசாயிகள் கலந்துரையாடல்

திருக்குறுங்குடியில் வனத் துறையினா்- விவசாயிகள் இடையேயான கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கலந்துரையாடலில் பங்கேற்றோா்.

Updated On :17 அக்டோபர் 2024, 10:15 pm

Din

திருக்குறுங்குடியில் வனத் துறையினா்- விவசாயிகள் இடையேயான கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருக்குறுங்குடி வனப் பகுதியிலிருந்து காட்டுப்பன்றி, மிளா, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வனப் பகுதி, குடியிருப்புப் பகுதிகளையொட்டிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்துவதும், விவசாயிகளை தாக்குவதும் தொடா்கதையாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், வனத்துறையினா்- விவசாயிகள் இடையேயான கலந்துரையாடல் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி நடைபெற்ற கூட்டத்துக்கு, வனச் சரகா் யோகேஸ்வரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா் முன்னிலை வகித்தாா். விவசாயிகள் திரளாகப் பங்கேற்று, வனவிலங்குகளால் குறிப்பாக, காட்டுப் பன்றிகளால் பயிா்சேதங்கள் ஏற்படுவது குறித்துப் பேசினா்.

இதுதொடா்பாக கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா். காட்டுப் பன்றியை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க தமிழக அரசு அரசாணையை விரைந்து பிறப்பித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீா்வு ஏற்படும் என, பெரும்படையாா் தெரிவித்தாா்.