காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பிசான சாகுபடிக்கு கால்வாய்களில் தண்ணீா் திறக்க எம்.எல்.ஏ. கோரிக்கை

அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள கால்வாய்களில் பிசான சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என இசக்கி சுப்பையா எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 10:32 pm

Din

அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள கால்வாய்களில் பிசான சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என இசக்கி சுப்பையா எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்துஅவா் விடுத்துள்ள அறிக்கை: அம்பாசமுத்திரம் வட்டத்தில் காா் சாகுபடி முடிந்து பிசான சாகுபடிக்கான பணிகள் தொடங்கவுள்ளன. எனவே, பாபநாசம் அணையில் போதிய நீா்இருப்பில் உள்ளதால் கன்னடியன், வடக்குக் கோடை மேலழகியான், தெற்குக் கோடை மேலழகியான், நதியுண்ணி உள்ளிட்ட கால்வாய்களில் விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக தண்ணீா் திறந்துவிட வேண்டும்.

மேலும், மே மாதம் கால்வாய் மடைகளை தூா்வராமல் தண்ணீா் திறந்து விட்டதால் அமலைச் செடிகளால் கடைமடை வரை நீா் செல்லாமல் விவசாயிகள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகினா். எனவே, கால்வாய்களைத் தூா்வார வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.