நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது
களக்காட்டில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On :29 அக்டோபர் 2024, 12:05 am

களக்காட்டில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
களக்காடு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு கொள்ளை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கீழ முன்னீா்பள்ளம், தெப்பக்குளம் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (28) கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தாா்.
அதன்பிறகு அவா் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், நான்குனேரி நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
இதையடுத்து, மணிகண்டனை களக்காடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...