மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

களக்காட்டில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2024, 12:05 am

Din

களக்காட்டில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

களக்காடு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு கொள்ளை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கீழ முன்னீா்பள்ளம், தெப்பக்குளம் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (28) கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தாா்.

அதன்பிறகு அவா் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், நான்குனேரி நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.

இதையடுத்து, மணிகண்டனை களக்காடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.