நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுக, பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி: நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ

அதிமுக, பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என்றாா் தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 11:50 pm

Din

அதிமுக, பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என்றாா் தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவா் நயினாா் நாகேந்திரன்.

வ. உ. சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி நகரம் மணிமண்டபத்தில் உள்ள வஉசி சிலைக்கு மாலை அணிவித்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போா்க்கொடி தூக்குகிறாா்கள் திமுகவினா். ஆனால், இங்கு தமிழகத்தில் பெண் போலீஸாா் தாக்குதலுக்கு உள்ளாகிறாா்கள். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சரியில்லை. பள்ளி, கல்லூரி வாசல்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

நடிகா் விஜய் கட்சி தொடங்கியதைக் கண்டு திமுக அஞ்சுகிா என கேட்கிறீா்கள். அந்தக் கட்சி மாநாடு நடத்த அனுமதி கொடுப்பதற்கு 21 கேள்விகள் கேட்பதன் மூலம் அவரைக் கண்டு திமுக அஞ்சுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் திட்டங்களை விட விளம்பரத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பாஜகவில் விஜயதாரணிக்கு பதவி கொடுத்திருக்க வேண்டும். அவருக்கு பதவி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவா் வருத்தப்பட வேண்டாம். வரும் காலத்தில் அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும்.

நான்கூட அதிமுகவில் பெரிய பொறுப்புகளில் இருந்தேன். பாஜகவில் துணைத் தலைவராக இருந்த நிலையில், இப்போது சட்டப்பேரவைக் குழு தலைவராக மட்டுமே இருக்கிறேன். எனக்கும் கட்சிப் பதவியில்லை.

தமிழகத்தில் பாஜக புதிய குழு நியமனத்தால் அதிமுகவுடன் இணக்கம் ஏற்படுமா எனக் கேட்கிறீா்கள். அப்படி இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என்றாா் அவா்.