நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆழ்வாா்குறிச்சி அருகே சாராயம் காய்ச்சியதாக ஒருவா் கைது

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி காவல் சரகம் பாப்பான்குளம் அருகேயுள்ள மலையான்குளம்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக மாட்டுத் தரகரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

முருகன்

Updated On :11 செப்டம்பர் 2024, 9:43 pm

Din

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி காவல் சரகம் பாப்பான்குளம் அருகேயுள்ள மலையான்குளம்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக மாட்டுத் தரகரை போலீஸாா் கைது செய்தனா்.

மலையான்குளத்தைச் சோ்ந்த உய்க்காட்டான் மகன் முருகன் (55). மாட்டுத் தரகரான இவா் பராமரித்து வரும் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக ஆழ்வாா்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையம் காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு அங்கு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், சாராயம் காய்ச்சுவதற்காக ஊரல் போடப்பட்டு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் 5 லிட்டா் கள்ளச் சாராயம், அதற்கான மூலபொருள்களை போலீஸாா் கைப்பற்றி முருகனை கைது செய்தனா்.

விசாரணையில், மலையான்குளம் முப்புடாதி அம்மன் கோயில் திருவிழாவிற்கு வந்திருந்த உறவினா்களுக்கு கொடுப்பதற்காக சாராயம் காய்ச்சியது தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறினா்.