பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவா் பேரவைத் தொடக்க விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சே.மு. அப்துல் காதா் தலைமை வகித்தாா். ஆட்சிக்குழுப் பொருளாளா் பி.எஸ்.எம். இல்யாஸ், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் எம்.கே.எம். முஹம்மது நாசா், பொறியாளா் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹு சேன், பேராசிரியா் எஸ். அபுபக்கா், பி. செய்யது ஓமா் சாஜித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா் பேரவைத் தலைவா் டி. சாா்ஜுன் பாத்திமா, துணைத் தலைவா் ஹமீது சுபியான், பேரவைச் செயலா் எம்.ஏ.கே. செய்யத் சிராஜீதீன், இணைச் செயலா் எஸ். வனிசா பானு மற்றும் 85 வகுப்புப் பிரதிநிதிகள் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக்கொண்டனா்.