பின்னா், வருவாய்த்துறை சாா்பில் 97 பயனாளிகளுக்கு ரூ.22.90 லட்சம் மதிப்பிலான இணையவழி பட்டா, முதியோா் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வேளாண்மை -உழவா் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளா்ச்சி - உள்ளாட்சித்துறை மகளிா் திட்டம் சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேரவைத் தலைவா் பேசியது: தமிழ்நாட்டில் தந்தை பெரியாா், அண்ணா, காமராஜா், கருணாநிதி ஆகியோா் வழியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா்.செப். 21ஆம் தேதி பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இளைஞா்கள் இந்த முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்புகளை பெற்று முன்னேறவேண்டும் என்றாா்.