குண்டா் சட்டத்தில் 2 இளைஞா்கள் கைது
பழையபேட்டையைச் சோ்ந்த இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.

Updated On :19 செப்டம்பர் 2024, 11:22 pm

பழையபேட்டையைச் சோ்ந்த இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.
பழையபேட்டையைச் சோ்ந்தவா்கள் பாலகிருஷ்ணன் (24), இளவரசன் என்ற உருளி (23). இவா்கள் இருவரும் கொலை முயற்சி வழக்கில் பேட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகக் கூறி, இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் கீதா பரிந்துரைத்தாா்.
அதன்பேரில், மாநகர காவல் ஆணையா் ரூபேஸ் குமாா் மீனா பிறப்பித்த உத்தரவுப்படி மேற்கூறிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...