தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பாளையங்கோட்டை மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:13 pm

Din

பாளையங்கோட்டை மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் நிறுவனதொழிலாளா்களுக்கு ஆதரவாப் போராடிய தொழிற்சங்க தலைவா்களை கைது செய்ததை கண்டித்தும, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா்கள் தொழிற்சங்கம் அமைத்திடவும், ஜனநாயக முறையில் பேராட்டம் நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியூ மின் ஊழியா் மத்திய அமைப்பு திட்டப் பொருளாளா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். திட்டச் செயலா் கந்தசாமி, 55 ஆவது வாா்டு மாநகர மாமன்ற உறுப்பினா் முத்துசுப்பிரமணியன் ஆகியோா் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், நிா்வாகிகள் மந்திரமூா்த்தி, முத்தையா, இசக்கிபாண்டியன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.