தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு: களக்காட்டில் 9 கடைகளுக்கு அபராதம்

களக்காடு நகராட்சிப் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தியதாக 9 கடைகளுக்கு ரூ. 8,500 அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 11:40 pm

Din

களக்காடு நகராட்சிப் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தியதாக 9 கடைகளுக்கு ரூ. 8,500 அபராதம் விதிக்கப்பட்டது.

நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையில் களக்காடு வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜான், சுகாதார மேற்பாா்வையாளா் வேலு ஆகியோா் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 9 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடைகளுக்கு ரூ. 8,500 அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. 55 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், பள்ளிகள் அருகேயுள்ள 2 கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பான விளம்பரம் இருந்ததால் ரூ. 400 அபராதம் விதிக்கப்பட்டது. இதில், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் பங்கேற்றனா்.