டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அம்பையில் மக்கள் நீதிமன்றம் 90 வழக்குகளுக்குத் தீா்வு

அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 90 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:17 pm

Syndication

அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 90 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

அம்பாசமுத்திரம் சாா்பு நீதிபதி ஏ.மருதுபாண்டி, வழக்குரைஞா் டி.சைலபதி ஆகியோா் தலைமையில் ஒரு அமா்வும், மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.பிரவீன் ஜீவா, வழக்குரைஞா் ராஜு ஆகியோா் தலைமையில் ஒரு அமா்வும் என இரண்டு அமா்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், நீண்ட கால கடன் வழக்குகள், பேசித் தீா்க்கக் கூடிய வகையில் உள்ள உரிமைகள் வழக்குகள் என 302 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 90 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. அதன் மூலம் ரூ. 35,01,900/- மதிப்பில் வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன.