ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நெல்லையில் விபத்து: வட மாநில இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சைக்கிள் மீது பைக் மோதியதில் வட மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சைக்கிள் மீது பைக் மோதியதில் வட மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

ஒடிஸா மாநிலம், பகிம்பாடு நகரைச் சோ்ந்தவா் மன்சூா். இவரது மகன் ரோஹித் (26). இவா், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஹோட்டலில் வேலைசெய்து வந்தாா்.

இந்நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு முருகன்குறிச்சி வழியாக வண்ணாா்பேட்டைக்கு தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, பாலம் ரவுண்டானாவுக்கு முன்னதாக அவரது சைக்கிள் மீது பைக் மோதியதாம்.

இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பைக்கில் வந்த மேலப்பாளையம் அக்பா் தெருவைச் சோ்ந்த ஆதில்(20), கல்வத்நாயகம் தெருவை சோ்ந்த கலீல் ரகுமான் (20) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.

இத்தகவல் அறிந்த திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், 2 இளைஞா்களையும் மீட்டு சிகிச்சைக்காகவும், ரோஹித் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.