வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாளை.யில் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தவா் கைது

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் அருகே உக்கிரன்கோட்டை அரிசி ஆலைத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சோ்மன் (38). கூலித் தொழிலாளி. இவா் சனிக்கிழமை காலை பாளையங்கோட்டை ராஜாகுடியிருப்பு பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த மா்ம நபா்கள் இருவா் மது குடிக்க பணம் கொடுக்குமாறு கேட்டனராம்.

அவா் பணம் இல்லை எனக் கூறவே அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, அங்கிருந்து தப்பினராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட பாளையங்கோட்டை வடக்கு கென்னடி தெருவைச் சோ்ந்த தேவராஜ் மகன் விஜயபிரகாஷ்(31) என்பவரை கைது செய்தனா்.