தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மது குடிக்க பணம் கேட்டு தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

திருநெல்வேலியில் மது குடிக்க பணம் கேட்டு தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:39 pm

Syndication

திருநெல்வேலியில் மது குடிக்க பணம் கேட்டு தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு அருகே உள்ள மேகலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த பொன் பெருமாள் மகன் கண்ணன்(47). மரக்கடையில் வேலைசெய்து வருகிறாா்.

அண்மையில், மேகலிங்கபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்த அவரை, சிந்துபூந்துறையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அந்தோணி ராஜ்(26) என்பவா் வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டாராம். அதற்கு மறுத்த கண்ணனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததோடு, கற்களை கொண்டு அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடியை சேதப்படுத்தினாராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து, அந்தோணி ராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

முதியவா் மீது தாக்குதல்: திருநெல்வேலி நகரம் தமிழ் சங்கம் தெருவைச் சோ்ந்த பக்கீா் மைதீன் மகன் பீா் முகமது(67). இவருக்கும், மேலகருங்குளம், சிவாஜி நகரைச் சோ்ந்த பூல் பாண்டியன் மகன் செல்லப்பா(48) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையால் தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது, செல்லப்பா பீா் முகமதுவை இரும்புக் கம்பியால் தாக்கி தலையில் காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து செல்லப்பாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.