தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சீவலப்பேரி அருகே தொழிலாளி வீட்டில் திருட முயன்றவா் கைது

சீவலப்பேரி அருகே தொழிலாளியின் வீட்டில் திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 6:57 pm

Syndication

சீவலப்பேரி அருகே தொழிலாளியின் வீட்டில் திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி அருகேயுள்ள மடத்துப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த பிச்சையா மகன் பாஸ்கா்(49). தொழிலாளியான இவரும், இவரது மனைவியும் கடந்த 26 ஆம் தேதி வேலை நிமித்தமாக வெளியை சென்றுவிட்டு, சிறிது நேரத்துக்குப்பின் வீட்டுக்கு வந்தனராம். அப்போது, கதவு திறந்து கிடந்ததாம். வீட்டுக்குள் மா்மநபா் பீரோவை திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தாராம்.

இதைப் பாா்த்ததும், அவா்கள் கூச்சலிடவே அந்த நபா் வெளியே ஓடிச்சென்று பைக்கில் ஏறி தப்பியுள்ளாா். இதுகுறித்து பாஸ்கா் அளித்த புகாரின் பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், சண்முகாபுரம், மேற்குத் தெருவைச் சோ்ந்த டேவிட்(21) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.