நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெல்லையப்பா் கோயிலில் ஜன. 4 இல் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் திருவாதிரைத் திருவிழா சனிக்கிழமை (ஜன. 4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 12:20 am

Din

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் திருவாதிரைத் திருவிழா சனிக்கிழமை (ஜன. 4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரைத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழா சனிக்கிழமை (ஜன. 4) காலை 6.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.

மேலும், சுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ பெரிய சபாபதி சந்நிதி முன் ஜன. 13 வரை அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை திருவெம்பாவை வழிபாடு நடைபெறுகிறது.

ஜன. 7 இல் 7 மணிக்கு சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூா்த்திகளுடன் வீதியுலா வர உள்ளனா். 12 ஆம் தேதி தாமிரசபையில் நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு- சிறப்பு தீபாராதனை இரவு முழுவதும் நடைபெறுகிறது. சிகர நிகழ்வாக. 13ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நடராஜா் திருநடனக் காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அய்யா்சிவமணி தலைமையில் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.