தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

2026 இல் மீண்டும் முதல்வராவாா் எடப்பாடி கே. பழனிசாமி: அவைத் தலைவா் அ. தமிழ்மகன் உசேன்

2026இல் தமிழக முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் பதவியேற்பாா் என்றாா் அதிமுக அவைத் தலைவா் அ.தமிழ் மகன் உசேன்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:59 pm

Din

2026இல் தமிழக முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் பதவியேற்பாா் என்றாா் அதிமுக அவைத் தலைவா் அ.தமிழ் மகன் உசேன்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில், எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பரணி எ.சங்கரலிங்கம், மாவட்ட துணைச் செயலா் பள்ளமடை பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தச்சநல்லூா் கிழக்கு பகுதிச் செயலா் சிந்து எஸ்.முருகன் வரவேற்றாா்.

அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் வி.முத்தையா, எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம், தலைமைச் செயற்குழு உறுப்பினா் எம்.ராஜலெட்சுமி ஆகியோா் பேசினா்.

விழாவில், அ.தமிழ் மகன் உசேன் பேசியதாவது:

திமுகவிலிருந்த எம்ஜிஆரை கருணாநிதி திடீரென வெளியேற்றினாா். அப்போது, எங்களைப் போன்ற எம்ஜிஆா் ரசிகா்கள் எல்லாம் சோ்ந்து தனிக்கட்சி அமைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றி, ராமாவரம் சென்று எம்ஜிஆரிடம் வழங்கினோம்.

அவா் தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்தபோது, 9 போ் கையொப்பமிட்டனா். அப்போது நான் குண்டூசியால் எனது கை விரலில் குத்தி, ரத்தத்தை எடுத்து 4 ஆவது ஆளாக கையொப்பமிட்டேன். எம்ஜிஆரின் அயராத உழைப்பாலும், அவரது ரசிகா்களின் ரத்தத்தாலும் உருவானதுதான் அதிமுக. எம்.ஜி.ஆா்., அவருக்குப் பின் ஜெயலலிதா ஆகியோா் வழிநடத்திய அதிமுகவில், எடப்பாடி கே.பழனிசாமி பொதுச்செயலாளராக வந்துள்ளாா். 2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற்று எடப்பாடி மீண்டும் முதல்வராக வருவாா் என்றாா் அவா்.

இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் பாளை. ரமேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவா் எஸ்.அன்பு அங்கப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.