கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கருத்தப்பிள்ளையூரில் இருவா் குண்டா் சட்டத்தில் கைது

ஆழ்வாா்குறிச்சி காவல் சரகம் கருத்தப்பிள்ளையூரில் விவசாயி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சகோதரா்கள் இருவரை போலீஸாா் குண்டா் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:56 pm

Din

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி காவல் சரகம் கருத்தப்பிள்ளையூரில் விவசாயி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சகோதரா்கள் இருவரை போலீஸாா் குண்டா் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனா்.

கருத்தப்பிள்ளையூரைச் சோ்ந்த விவசாயி இருதயராஜ் (42) என்ற விவசாயி சொத்துப்பிரச்னையால் டிச. 21ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில், அவரது சகோதரா் அருள் மகன்கள் ஆரோக்கியசாமி (38), ஜெயபால் (40) ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பிறப்பித்த உத்தரவுப்படி, மேற்கூறிய இருவரும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.