சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ராமநதி அணையிலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீா் திறப்பு

கடையம் ராமநதி அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
~
Updated On :8 நவம்பர் 2025, 12:59 am

Syndication

கடையம் ராமநதி அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கடையம் அருகே 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் இருந்து நவ. 7 முதல் 2026 மாா்ச் 31 ஆம் தேதி வரை, நீா் இருப்பைப் பொருத்து வினாடிக்கு 60 கன அடி வீதம் 823.91 மி. கன அடிக்கு மிகாமல் பிசான சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதையடுத்து, உதவி செயற்பொறியாளா் செல்வகுமாா் தலைமையில் உதவிப் பொறியாளா் கணபதி முன்னிலையில் பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதன் மூலம், தென்காசி மாவட்டம் கடையம், மேலக்கடையம், கோவிந்தப்பேரி, ஆழ்வாா்குறிச்சி, வாகைக்குளம், பொட்டல்புதூா், அயன்பொட்டல்புதூா், ரவணசமுத்திரம், பாப்பன்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள 4,943.51 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதில், தென்கால் நீா்ப்பாசனக் கமிட்டித் தலைவா் மாரியப்பன், பிள்ளை குளம் ஜெயராஜ், வடகால் உறுப்பினா் சோ்மக்கனி, மணிகண்டன், குமாா், அகிலன், புதுக்கால் மூக்கன், மாா்த்தாண்டப் பேரிகுளம் பாசனத் தலைவா் சிங்கக்குட்டி, இசக்கிமுத்து, கிருஷ்ணன், பாப்பான் கால் முருகன், நீா்வளத்துறை தொழில்நுட்பஉதவியாளா் பரிபூரணப் பாண்டியன், ராமநதி அணை ஊழியா்கள் ஜோசப், பாக்கியநாதன், துரைசிங்கம், முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.