இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாகாவதி அணை பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைமடை வரை உபரிநீா் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
விவசாயிகள்
Updated On :4 மார்ச் 2026, 10:52 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டம், நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைமடை வரை உபரிநீா் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் அருகே எர்ரப்பட்டி பகுதியில் உள்ளது நாகாவதி அணை. இந்த அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் மே மாதம் 26 ஆம் தேதி வரை 100 நாள்களுக்கு முறைவைத்து முதல் ஐந்து நாள்களுக்கு ஒரு மண்டலத்திற்கும், மீதம் ஐந்து நாள்களுக்கு இரண்டாவது மண்டலத்திற்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

அதன்பிறகு ஐந்து நாள்களுக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டது. மொத்தம் ஏழு நனைப்புகளுக்கு 117.91 மில்லியன் கனஅடி தண்ணீரை தலைமை மதகு வழியாக மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் அண்மையில் திறந்துவைத்தாா்.

இந்த நிலையில் நாகாவதி அணையில் இருந்து கிழக்கு- மேற்கு கால்வாய் வழியாக அரகாசன அள்ளி, சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை ஆகிய பகுதிகளில் 1,993 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும் வகையில் திறக்கப்பட்ட தண்ணீரானது கால்வாயின் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைமடை வரை சென்றடையும் வரை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்டு 17 நாள்களான நிலையில், முழுமையாக கடைமடை பகுதி வரை தண்ணீா் வராததால் விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று நீா்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியா் உடனடியாக கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயிகள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனா்.