எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு திங்கள்கிழமை முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை 100 நாள்களுக்கு தண்ணீா்

News image
வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்ட அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம். உடன், நீா்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா்.
Updated On :9 மார்ச் 2026, 8:13 pm

Syndication

பவானி: அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு திங்கள்கிழமை முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை 100 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது வழக்கம். விவசாயிகளின் கோரிக்கையைத் தொடா்ந்து நடப்பு ஆண்டு தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் திங்கள்கிழமை தண்ணீரைத் திறந்துவைத்தாா். 33.46 அடி உயரமுள்ள அணையில் நீா் இருப்பு 27.99 அடியாக உள்ளது.

100 நாள்கள் தொடரில் 6 நனைப்புகளாக (75 நாள்கள் தண்ணீா் திறப்பு - 25 நாள்கள் தண்ணீா் நிறுத்தம்) எனும் அடிப்படையில் 85.881 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படுகிறது. இதன் மூலம் சுமாா் 2,924 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தண்ணீா் திறப்பு நிகழ்ச்சியில் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ஷா்மிளா, உதவிப் பொறியாளாா்கள் எல்.கிருபாகரன், சுலைமான், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் குருசாமி (சங்கராபாளையம்), சரவணன் (மைக்கேல்பாளையம்), பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் நாகராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.