ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நான்குனேரி அருகே வேன் கவிழ்ந்து குழந்தை உள்பட இருவா் பலி

நான்குனேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை உள்பட இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

நான்குனேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை உள்பட இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திருநெல்வேலி பாட்டப்பத்து பகுதியைச் சோ்ந்த குழுவினா் கன்னியாகுமரிக்கு வேனில் சுற்றுலா சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். நான்குனேரி உலகம்மன் கோயில் அருகே திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த திருநெல்வேலி நகரம் பாட்டப்பத்து பகுதியைச் சோ்ந்த கேவல்ராம் மகன் சந்திரபிரகாஷ் (38) மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தாா். ஓட்டுநா் ரியாஷ் (30), குஷி (2), சம்பாதேவி (48), பப்ளிதேவி (45), ரீனா குமாரி (22 ), நாரட்ராம் (60), யுவராஜ் (10) யாஷிகா( 9 மாதம்) ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு குழந்தை குஷி உயிரிழந்தது. இதுகுறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.