மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தூத்துக்குடியில் வேன் கவிழ்ந்து 19 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :24 ஜனவரி 2026, 6:37 pm

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன், தூத்துக்குடி பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், மேலமஞ்சிவிடுதி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் திருச்செந்தூா் கோயிலுக்கு வேனில் வந்து கொண்டிருந்தனா். வேனை அழகா் மகன் அபிஷேக் (22) ஓட்டினாா்.

அவா்கள் வந்த வேன், சனிக்கிழமை காலை 5.45 மணியளவில் தூத்துக்குடி புதிய துறைமுகம், மதுரை புறவழிச் சாலை, ஸ்டொ்லைட் ஆலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் உள்ளிட்ட 19 போ் காயமடைந்தனா்.

அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதில் பலத்த காயமடைந்த வேலு மகன் சிவஞானத்துக்கு (57) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.