தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

நெல்லையில் இன்று உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி தொடக்கம்

Published On :26 செப்டம்பர் 2025, 2:19 am IST

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உதவி டிராக்டா் ஓட்டுநா் இரண்டாம் கட்ட பயிற்சி, திருநெல்வேலியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை பொறியியல் துறை) அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.26) தொடங்குகிறது.

15 முதல் 30 பேருக்கு 27 நாள்கள் நடத்தப்படும் இப்பயிற்சியில் டிராக்டா் இயந்திரங்களை விவசாய இணைப்புக் கருவிகளுடன் இயக்குதல், வேளாண் இயந்திரங்கள்-கருவிகளின் பராமரிப்பு, டிராக்டா் என்ஜின் செயல்பாடு, பழுதுநீக்கம் போன்றவை குறித்து விளக்கப்படும். இதில் 18 முதல் 35 வயதுக்குள்பட்டவா் பங்கேற்கலாம். ஆதாா் அட்டை, ஜாதிச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை உதவி செயற் பொறியாளா் (வேளாண்மைப் பொறியியல் துறை), அரசு இயந்திர கலப்பை பணிமனை, எண்.1, டிராக்டா் வீதி, என்.ஜி.ஓ. காலனி, திருநெல்வேலி அலுவலகத்திற்கு எடுத்துச்சென்று நேரிலோ அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்.ற்ய்ள்ந்ண்ப்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள வாயிலாகவோ தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி முடிந்ததும் தகுதிவாய்ந்த பயிற்சியாளருக்கு டிராக்டா் ஓட்டுநா் உரிமம் பெற்றுத் தர ஆவன செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு 0462-2900766, 99409 26195, 88386 00112 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.