திருநெல்வேலி அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (65). ஓய்வு பெற்ற அரசு ஊழியா். இவா் தனது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக திருநெல்வேலி அருகன்குளம் தாமிரவருணி ஆற்றங்கரைக்கு உறவினா்களுடன் வெள்ளிக்கிழமை காரில் சென்றாராம்.
காரை இவரது மகன் முத்துசங்கா் ஓட்டினாராம். கங்கைகொண்டான் அருகே துறையூா் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் இவா்கள் பயணித்த காரும், அவ்வழியாக சென்ற லாரியும் மோதியதாம். இதில் காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ராதாகிருஷ்ணன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் சுகாதார ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல்! உதவி ஆய்வாளா் உயிரிழப்பு!

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


